காத்திருப்பு!

wiatingஇன்னும் எத்தனை நாட்கள்
காத்திருக்க வைப்பாயோ
அறியேன் ?
ஜென்மம் ஆனாலும்
காத்திருக்கிறேன் …
காத்திருப்பேன்…
உன்னோடு நானும்,
என்னோடு நீயும்,
நம்மோடு நம் காதலும்,
காதலோடு நம் நட்பும்
கலந்த நாட்களை
நினைத்து கொண்டே
காத்திருப்பேன்…
காவியம் படைக்க
நம் காதல் என்ன
தேவதாஸ் பார்வதி காதலா ?
என நீ கேட்டால்,
இல்லை இல்லை…
விட்டுப் போன வாய்ப்பு
விடாமல் விதி வழியே
மறுபடியும் ஒரு முறை
எதிரில் வரும் பொழுது
யார் தான் காத்திருப்பை
வேண்டாம் என்பாரடி !
விரைவில் வா…
வானம் அளவுக்கு
என்மனம் முழுதும்
நிறைந்திருக்கிறாய்..
வானவில் வண்ணமாய்
மனதை மாற்ற வா !

Image courtesy: காத்திருப்பு!

இதயம்!

Heart

கூற போடத்தான்
இதயத்தை கேட்டாயா?
அறிவற்ற மனம்
அர்த்தமறியாமல்
அளித்துவிட்டேன்,
கிழிந்து போன இதயத்தை!
தைத்தல்லவா கொடுத்திருப்பேன்
மிச்சமிருக்கும்
உன் பெயர் சொல்லும்
என் நரம்புகளில் ஊடே !

Picture Courtesy: இதயம்

அவள்!

அவனும் அவளும் !

ஒரு வரிக்
கவிதை அவள் !
உலா வரும்
உவகை அவள் !
தவிப்பில்
திளைக்க விடுபவள்!
சிலிர்ப்பில்
சிந்திக்க வைப்பவள்!
பார்வையில்
பாதிஉயிரை எடுப்பவள் !
மீதியில்
மிச்சத்தை வாங்குபவள்!
ஒளிரும்
உதயமாய் அவள் !
கவலையற்ற
காரிகை அவள் !
கேளிக்கை நடுவில்,
உதிரும் நேரத்தில்,
நிறைக்கும் நெஞ்சத்தில்,
அழையா விருந்தாளியாய்
அவனும்,
அவன் காதலும்
அவளுக்குள் !

சற்று நேரத்தில்!

சட்டென முடிவெடுத்த
என் வருங்காலம் நீ!

சரீரத்தில் காணாத அழகி நீ,
சற்று நேரத்தில் தாக்கிய மின்னல் நீ,
சந்தனம் பூசிய நிலவு நீ,
சகஜமாய் பேச வார்த்தைகள் நீ,
சங்கீத மேடையில் இசை நீ ,
சிலிர்க்க வைக்கும் தென்றல் நீ,
சமயத்தில் மனதில் பதிந்த நீ ,
சாகும் வரை என் பதியாக வாராயோ?
சகித்து போகும் காதலனாக
சேவிப்பேன் பெண்ணே உனக்காக !

 

Image Source: https://www.shopaardvark.com/

 

 

 

 

 

அவன்!

கசிவது அவள்
கண்ணீர் தான்,
காய்வது அவள்
மனம் தான்,
கழிப்பது அவள்
காலம்  தான்,
கண்முன்னே அவன்
பிம்பம் தான்,
கதையில் அவன்
பெயர் தான்,
கவிதையில் அவன்
குறிப்பு தான்,
கனவிலும் அவன்
நினைவு தான்,
காத்திருப்பதும்
சுகம் தான்,
காதலில் அவன்
மட்டுமே இருப்பதால்!!

என்னவளே !

இடம் மாறினால்
இதயம் மாறாதடி !
நீ நிரம்பிய
என் நெஞ்சம்,
திகட்டுது,
உன் அன்பை கண்டு !
நீ நெறிப்படுத்திய
என் பண்பு
திகைக்கிறது,
உன் அறிவை கண்டு !
நொடி தோரும்,
உன்னை தொழ
ஆவலடி பெண்னே!
ஆனால்
நிமிர்ந்து நம் காதலை
கூறத்தான் வாய்ப்பில்லையடி !
அறிவேனடி காதலி,
ஆனாலும்
அமர்ந்து நம் காவியம்
எழுத என் பேனா போதுமடி !

 

 

படம் வரைவுகளை : Love!