காரணிகள்
பல கூறலாம்,
பேட்டிக்காக !
ஒரு வாரமாக
எரியும் நெருப்பை
கட்டுக்குள் வைக்காதவர்களை,
பழி சொல்வதா?
எரிவது தெரிந்தும்
அனுமதித்தவர்களை,
பழி சொல்வதா?
பழியை கூட
ஏற்றுக்கொள்ள
மாட்டாதவர்கள்,
கடைசியில்
பாதிக்கப்பட்டவர்களின் மேல்
பழியையும் சொல்லிவிடுவார்கள் !
என்ன அரசோ !
என்ன சட்டங்களோ !
எங்கே தான் மனிதநேயமோ !
பழி கூறுவதினால்,
காயப்பட்டவர்களின்,
வலி ஆறுமா?
கருகிய உயிர்கள் தான்,
திரும்பி வருமா?
– ப்ரியா சக்திவேல்