வீணுரையாடு!

விபரம் அறியாமல்
வசனம பேசுபவர்கள்
நேரத்தின் மகத்துவம்
அறியாதவர்கள் !

வீடு வரை குடும்பம்
வாசல் வரை உறவுகள் !
விடை தெரியா விஷயங்களில்
வினா எழுப்புவது சுலபம் !
விதி மாறும் உலகில்,
விகல்பமான கருத்துக்களும் சகஜம் !
வளைந்து கொடுக்கும்
சில மனங்கள்,
வசை பாட மட்டும்
பல ஜென்மங்கள் !
வில்லங்கமே உருவாய்
நிறைய ஜந்துக்கள் !
இவற்றையெல்லாம் தாண்டி
வீராப்பு பேச்சு பேசாமல்
வெற்றியடையும் மனிதர்கள் பல !
அவர்களையும் வகுத்தெடுத்தபின்
சில எண்ணிக்கைகள்,
சிறப்பாய் வாழ வழிஇருந்தும்,
வாழத்தெரியாமல்,
வேக்காணம் மட்டும் பேசுவதை,
சகிப்பதைக் காட்டிலும்,
எதிர்செயலாற்றுவதைக் காட்டிலும்,
வெறுப்பதைக் காட்டிலும்,
மதிக்காமல் இருப்பதே,
சாலச் சிறந்தது !