அன்பு முத்தம் கொடுத்து
அழகு பார்க்கும் வயதில்,
அனலுக்கு கரியாக்கப்பட்டுக் கிடந்த
மழலையை கண்ட போது..
பல கேள்விகள் !
எந்த சந்தோசத்தை
அனுபவித்திருக்கும் ?
எதை கண்டு
ஆசைப்பட்டிருக்கும் ?
எவ்வளவு பூரிப்புடன்
கிளம்பியிருக்கும் ?
எத்தனை ஆர்வத்துடன்
வாழ்ந்திருக்கும் ?
எல்லாமே கருகியது
ஒரே தீக்குச்சியால் ?
இல்லை .. இல்லை ..
அவளை பெற்றவர்களின்
சூழ்நிலை தவறினால் !
குறை கூறி பயனில்லை !
போன துளிர்கள்,
தழைக்கப்போவதில்லை!
போகும் நாட்களில்,
நாம் நினைக்கபோவதுமில்லை !
அடுத்த ஜென்மத்திலாவது
இன்னல்கள் இல்லா,
நேயமுள்ள,
நேசமுள்ள ,
உலகில் பிறக்க,
வேண்டுவதை தவிர
வேறெதுவுமில்லை !
May their soul rest in peace!
Image source: Facebook