தீயின் இரை !

தவறு செய்யாமல் தண்டனை !
அதன் கொடூரம் இதுவல்லவே !

அன்பு முத்தம் கொடுத்து
அழகு பார்க்கும் வயதில்,
அனலுக்கு கரியாக்கப்பட்டுக் கிடந்த
மழலையை கண்ட போது..
பல கேள்விகள் !
எந்த சந்தோசத்தை
அனுபவித்திருக்கும் ?
எதை கண்டு
ஆசைப்பட்டிருக்கும் ?
எவ்வளவு பூரிப்புடன்
கிளம்பியிருக்கும் ?
எத்தனை ஆர்வத்துடன்
வாழ்ந்திருக்கும் ?
எல்லாமே கருகியது
ஒரே தீக்குச்சியால் ?
இல்லை .. இல்லை ..
அவளை பெற்றவர்களின்
சூழ்நிலை தவறினால் !
குறை கூறி பயனில்லை !
போன துளிர்கள்,
தழைக்கப்போவதில்லை!
போகும் நாட்களில்,
நாம் நினைக்கபோவதுமில்லை !
அடுத்த ஜென்மத்திலாவது
இன்னல்கள் இல்லா,
நேயமுள்ள,
நேசமுள்ள ,
உலகில் பிறக்க,
வேண்டுவதை தவிர
வேறெதுவுமில்லை !

May their soul rest in peace!

Image source: Facebook

அம்மா!

அம்மா – My Best friend/Forever lover.

சுயநலமில்லா
                  காதலியே,
சிந்தனையை
                 நிஜமாக்கும் அன்பே,
சிரமத்தை
                 சிதறவைக்கும் நினைவே,
சரிவை
                 தாங்கும் தாரகையே,
உணர்வுகளை
                 உரித்தாக்கும் உயிரே ,
அடைமொழிகள் பல உண்டு உங்களுக்கு
ஆனால் எங்கள் அன்பு மட்டும் ஒன்று!
அது உங்களுக்கு மட்டும் தான் – அம்மா !